வாங்க.. வாங்க.. வணக்கம். தங்கள் வரவு நல்வரவாகுக. !

01 ஜனவரி 2012

இத்தனை அடாவடிகளா?





புத்தாண்டின் முதல் நாளான இன்று காலை (01.01.2012) தொலைக்காட்சியில் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்தேன்.
வண்ண வண்ண விளக்குகளின் வர்ணஜாலங்களும், விண்ணில் வெடித்துச் சிதறிய பட்டாசுகளின் ஒளிவெள்ளமும், புத்தாண்டை வரவேற்கும்போது மக்களின் முகத்தில் பிரதிபலித்த மகிழ்ச்சியும், ஆரவாரமும் உலகம் முழுவதும் நடந்த புத்தாண்டுக் கொண்டாட் டங்களின் நிகழ்ச்சிகளாக காட்டப்பட்டன.
உள்ளூர் செய்திகளின் வரிசையில் சென்னை மெரீனாவில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டமும், பெரிய பெரிய ஹோட்டல்களில் நடந்த மது விருந்துகளும், குடி போதையில் இளசுகள் போட்ட அரைகுறை ஆபாச அசிங்கங்களும், ஹேப்பி நியூ இயர் என காட்டுக் கத்தலாக டூவீலரில் சிலர் கத்திக் கொண்டுச் சென்றதையும் காண நேர்ந்தது.
ஆண்டுதோறும் வாடிக்கையாக வந்து செல்லும் ஒரு நிகழ்வுக்காக இத்தனை அடாவடிகளா?... அப்பப்பா…
தொடர்ந்து வந்த செய்தியில்…
வட தமிழக மாவட்டங்களை சூறையாடி, சின்னபின்னமாக்கிய தானே புயலின் கோர தாண்டவத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களும் ஒளிபரப்பாகின. பால், நீர், மின்சாரம், இருக்க இடமின்றி, சாப்பிடுவதற்கு உணவின்றி மக்கள் பரிதவிக்கும் காட்சிகள் மனதை வெகுவாக பாதித்தது.
பயிர்கள் நீரில் மூழ்கி, சூறாவளிக் காற்றில் வாழை, கரும்பு, முந்திரி பயிர்கள் முற்றிலும் நாசமானதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதும் புத்தாண்டு சோகக் காட்சிகளாக பதிவாயின.
நாகரீகம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவுக் கொண்டாட்டங்கள் ஒருபுறம், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு சோகத்தில் சிக்கித் தவிக்கும் மனித ஜீவன்கள் மறுபுறம்.
இதுதான் வாழ்க்கை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக